தமிழக செய்திகள்

சென்டிரல் ரெயில் நிலையத்தில் டெக்னீசியன் மயங்கி விழுந்து சாவு

சென்டிரல் ரெயில் நிலையத்தில் மயங்கி விழுந்து டெக்னீசியன் உயிரிழந்தார்.

தினத்தந்தி

ஆவடியை அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் வேலாங்கன் (வயது 47). இவர், எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். வேலாங்கன் நேற்று வழக்கம்போல் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வேலாங்கனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அவரது உடல் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சென்டிரல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்