தமிழக செய்திகள்

மொபட் கவிழ்ந்து இளம்பெண் பலி

நெல்லை அருகே மொபட் கவிழ்ந்து இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

இளம்பெண்

நெல்லை டவுன் மகிழ்வண்ணநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவருடைய மகள் காந்திமதி (வயது 33). இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்து வந்தனர். இந்த நிலையில் காந்திமதி பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் சென்றார். பின்னர் அங்கிருந்து மொபட்டில் நெல்லை நோக்கி சீதபற்பநல்லூர் அருகே உகந்தான்பட்டி விலக்கு பகுதியில் வந்து கொண்டு இருந்தார்.

பலி

அந்த பகுதியில் 4 வழிச்சாலை வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. அந்த ரோட்டில் வந்து கொண்டிருந்த காந்திமதி எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி மொபட்டுடன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி தகவல் அறிந்த சீதபற்பநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காந்திமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து