தமிழக செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் கைது

பெரியநாயக்கன்பாளையம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

பெ.நா.பாளையம்

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையில் போலீசார் மத்தம்பாளையம் கோட்டை பிரிவு, ஒண்ணிபாளையம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒண்ணிபாளையம் பிரிவு அருகே போலீசாரை பார்த்ததும் ஒருவர் மூட்டையுடன் தப்பியோட முயன்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரை துரத்தி சென்று பிடித்தனர். அவர் வைத்திருந்த மூட்டையை சோதனை செய்தபோது அதில் 5 கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஒடிசா மாநிலம் சாம்பல்பூர் பகுதியைச் சேர்ந்த சுஷாந்தகுமார் (வயது 26) என்பதும், அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்