தமிழக செய்திகள்

வாலிபர் போக்சோவில் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

அரக்கோணத்தை அடுத்த வேடல் பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 23). கூலி வேலை செய்து வருகிறார். இவர் நெமிலி தாலுகா பகுதியை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவியை கடந்து சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த மாணவியின் பெற்றோர், அஜித்குமாருடன் பேசுவரை தவிர்க்க சொன்னதால் அஜீத் குமாருடன் பேசுவதை மாணவி தவிர்த்துள்ளர்.

அஜித் குமாருக்கு அவரது குடும்பத்தினர் வேறு பெண்னை திருமணம் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மாணவியிடம், அஜித்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் தாய் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி விசாரனை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அஜீத் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு