தமிழக செய்திகள்

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

தானிப்பாடி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகே போந்தை வேடியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி (வயது 45), இவர் பானிபூரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், தங்கப்பாண்டியன் (24), துரைப்பாண்டியன் (21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். தங்கபாண்டியன் பி.எஸ்சி படித்துவிட்டு தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று  விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கப்பாண்டியன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து