தமிழக செய்திகள்

மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

அரக்கோணம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

தினத்தந்தி

அரக்கோணத்தை அடுத்த குருராஜபேட்டை பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் நாகராஜன் (வயது 30), கார் டிரைவராக பணியாற்றினார்.

நேற்று முன்தினம் இரவு நாகராஜன் அவரது தாயாருடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நாகராஜன் நள்ளிரவு மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது