தமிழக செய்திகள்

டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி

திருமுடிவாக்கம் சாலையில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

திருவண்ணாமலை மாவட்டம் வானாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணியரசன்(வயது 33). படப்பை அடுத்த பனப்பாக்கம் பகுதியில் மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வந்தார். இவர், சென்னையில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுனத்தில் பணி செய்து வந்தார்.

நேற்று மதியம் திருநீர்மலை திருமுடிவாக்கம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். திடீரென சாலையின் குறுக்கே மாடு வந்ததால் அது மேல் மோதாமல் இருக்க மோட்டார்சைக்கிளை வலது புறமாக திருப்பினார். அப்போது எதிரே வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் தலை, கால், கைகளில் பலத்த காயமடைந்த மணியரசன், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான ராஜா(43) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து