தமிழக செய்திகள்

காதலியை பார்ப்பதற்காக பஸ்சை திருடிய வாலிபர்

இலங்கையில் காதலியை பார்ப்பதற்காக இளைஞர் ஒருவர் பஸ்சை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

கொழும்பு

இலங்கை பிலியந்தலை பஸ் டிப்போவில் நேற்று இரவு அரசு பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை காண டிப்போவிற்கு சென்றார். மேலும் சிலர் உணவு வாங்கவும் சென்றிருந்தனர். திரும்பி வந்து பார்த்த போது, அங்கி நிறுத்தி இருந்த பஸ் காணாமல் போனதை உணர்ந்த டிரைவர் பிலியந்தலை போலீசில் புகார் அளித்தார்.

இதை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கெஸ்பேவ - பிலியந்தலை சந்திக்கு அருகில் உள்ள சோதனைச் சாவடியில் இருந்த பஸ் செல்வதை கண்ட அதிகாரிகள் பேருந்தை தடுத்து நிறுத்தி தப்பியோட முயன்ற அந்த வாலைபரை பிடித்து கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது காதலியை பார்த்துவிட்டு திரும்பும் போது போலீசாரால் கைது செய்யப்பட்டதாக அந்த வாலிபர் தெரிவித்தார்.

நேற்று இரவு 8 மணிக்குப் பிறகு தனது காதலியைச் சந்திக்க ஏற்பாடு செய்ததாகக் கூறிய வாலிபர், பேருந்து நிலையத்திற்கு வந்தபோது பஸ்கள் இயங்கவில்லை என்பதை உணர்ந்ததாகவும் டிப்போவில் நிறுத்தி பஸ்ஸை எடுத்துச்சென்றதாக கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு