தமிழக செய்திகள்

கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது

நெல்லை மேலப்பாளையத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலப்பாளையம் போலீசார் குறிச்சி வாய்க்கால்பாலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மேலப்பாளையம் ஜமாலி தைக்கா தெருவை சேர்ந்தவர் அப்துல்மஜிது மகன் முகமது யூசப் (வயது 30), சப்பாணி ஆலீம் தெருவை சேர்ந்த கபீர்முகமது மகன் முகமது யாசர் (25) ஆகியோர் என்பதும், அவர்கள் கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்