தமிழக செய்திகள்

மதுரையில் இருந்து எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

மதுரையில் இருந்து எழும்பூர் வரும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மதுரையில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) புறப்பட்டு சென்னை வரவேண்டிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22672) மதுரையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 1.15 மணி நேரம் தாமதமாக மாலை 4.15 மணிக்கு புறப்படும்.

விஜயவாடா-குண்டக்கல் இடையே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 24-ந் தேதி (நாளை) முதல் 28-ந் தேதி வரை பித்ரகுண்டாவில் இருந்து காலை 4.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண். 17237) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, இதே நாட்களில் சென்னை சென்டிரலில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு பித்ரகுண்டா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (17238) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் (22675) பொன்மலை மற்றும் திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை