தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரி அருகேகாலபைரவர் கோவில் திருவிழா

தினத்தந்தி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரிய ஏரி மேற்கு பகுதியில் உள்ள காலபைரவர் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி 32 கிராம மக்கள் பங்கேற்ற திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மகா ஹோமம், மூலவருக்கு ருத்ராபிஷேகம், கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம் ஆகியவை வழங்கப்பட்டன. இரவு 10 மணி முதல் காலை வரை சேவாட்டமும், இரவு 12 மணிக்கு சாமி உற்சவ மூர்த்திகள் ஊர்வலம் நடைபெற்றன.

நேற்று காலை 8 மணிக்கு பைரவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன. பின்னர் தங்ககவச அலங்காரத்தில் கால பைரவர் அருள்பாலித்தார். தொடர்ந்து காலபைரவர் உற்சவ ஊர்வலம் நடந்தது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. இதில் 32 கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து