தமிழக செய்திகள்

ஞான சித்தர் வெங்கிடுசுப்பையா சுவாமிகள் 150-வது ஆண்டு குருபூஜை விழா

ஞான சித்தர் வெங்கிடுசுப்பையா சுவாமிகள் 150-வது ஆண்டு குருபூஜை விழா நடந்தது.

பட்டுக்கோட்டை பெரியகடைத்தெரு மேல் பாகத்தில் ஞான சித்தர் வெங்கிடுசுப்பையா சுவாமிகள் ஆலயம் உள்ளது. சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்து 150 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி 4 நாட்கள் குருபூஜை விழா நடைபெற்றது. விழாவை மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி சுவாமிஜி, மாதாஜி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். நாவலாசிரியர் இந்திரா சவுந்தர்ராஜன் சித்தர்களின் பெருமை என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளும், ராமலிங்க சுவாமி அடியார்கள் அகவல் பாராயணமும் நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெங்கிடுசுப்பையா சுவாமிகள் உருவப்படம் புஷ்ப பல்லக்கில் வீதியுலா வரும் நிகழ்ச்சி பஜனையுடன் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அன்னதான கமிட்டியினர் செய்து இருந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்