தமிழக செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்கத்தேர் புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தங்கத்தேர் புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

தினத்தந்தி

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தினந்தோறும் மாலை 6 மணியளவில் தங்கரதம் பிரகாரம் சுற்றி வருவது வழக்கம். இக்கோவிலில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் கடந்த 28.9.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வருகிற கந்தசஷ்டி திருவிழாவிற்கு முன்பு கோவிலின் வடக்கு மற்றும் கிழக்கு பிரகார தரைத்தள பணிகள் நடைபெற உள்ளது. திருவிழாவிற்கு பிறகு கோவிலின் தெற்கு மற்றும் மேற்கு பிரகார தரைத்தளம் பணிகள் நடைபெற உள்ளன. இப்பணிகள் நடைபெற உள்ளதால் வருகிற 17-ந் தேதி முதல் தங்கரதம் புறப்பாடு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. பணிகள் முடிவுற்ற பின் தங்கரதம் புறப்பாடு வழக்கம் போல் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது