தமிழக செய்திகள்

தென்காசி: கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் 2 ஆசிரியர்கள் கைது..!

தென்காசி அருகே கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் 2 ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினத்தந்தி

புளியங்குடி,

தென்காசி மாவட்டம் புளியங்குயை சேர்ந்த மாணவி இந்து பிரியா (வயது 18). இவர் மனோ கல்லூரியில் பி.காம் 1-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையிலி மாணவி இந்து பிரியா நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

அப்போது தனது தற்கொலைக்கு ஆசிரியர்கள் தான் காரணம் என்று அவர் கடிதம் எழுதி வைத்து உள்ளார்.

இதனை அறிந்த புளியங்குடி போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவி எழுதி வைத்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரி ஆசிரியர் முத்துமணி மற்றும் ஆசிரியை வளர்மதி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இவர்கள் இருவரையும் சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், முத்துமணியை தென்காசி சிறையிலும், வளர்மதியை திருநெல்வேலி கொக்கிரகுள்ம் சிறையிலும் அடைத்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு