தமிழக செய்திகள்

தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகள் புகைப்படங்களை போலீசார் வெளியிடவில்லை - டிஜிபி திரிபாதி

தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகள் புகைப்படங்களை போலீசார் வெளியிடவில்லை என டிஜிபி திரிபாதி விளக்கம் அளித்துள்ளார்.

கோவை,

இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையை போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக டிஜிபி திரிபாதிக்கு மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.

உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் காவல் ஆணையாளர்களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கடலோர பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான படகுகளை கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி நேற்று இரவு முதலே அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் ஊடுருவியிருக்கும் 6 பயங்கரவாதிகளும் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கோவை முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். பொது இடங்கள் மற்றும் பதற்றமான இடங்களில் போலீசார் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகின்றனர்.

நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்து மாறுவேடத்தில் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகளில் ஒருவன் பாகிஸ்தானைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்றும், மற்ற 5 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும் உளவுத்துறை கூறி உள்ளது.

தமிழகத்தில் ஊடுருவிய பயங்கரவாதிகள் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டதாக இன்று காலையில் பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதனை போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி மறுத்து உள்ளார்.

பயங்கரவாதிகள் தொடர்பாக எந்த புகைப்படங்களையும் நாங்கள் வெளியிடவில்லை. அதுபோன்ற புகைப்படங்களை வெளியிடுவதாக இருந்தால் முறைப்படி டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து விரிவான தகவல்களை அறிக்கையாக அனுப்புவோம் என கூறினார்.

இதற்கிடையே கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரணும் பயங்கரவாதிகள் புகைப்படங்களை நாங்கள் வெளியிடவில்லை என்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பயங்கரவாதிகள் நுழைந்ததாக வெளியான தகவலையடுத்து கோவில்கள், வணிக வளாகங்கள், விமான நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.

ராணுவம் மற்றும் விமானப்படையை தயாராக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்