தமிழக செய்திகள்

காலை உணவுத் திட்டம் குறித்து சிறப்பாக எழுதியுள்ள 'தினத்தந்தி' உள்ளிட்ட நாளிதழ்களுக்கு நன்றி - முதல் அமைச்சர் டுவீட்

காலை உணவுத்திட்டம் மிகமிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதை புகழ்பெற்ற நாளிதழ்கள் உறுதி செய்திருப்பது என் உள்ளத்துக்கு மகிழ்ச்சியைத் தருவதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், "காலை உணவுத்திட்டம் குறித்து சிறப்பாக எழுதியுள்ள தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களுக்கு எனது நன்றி" என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, "காலை உணவுத்திட்டம் தொடங்கியது முதல், நாள்தோறும் கண்காணிக்கிறேன்; எவ்விதக் குறைபாடுமின்றி, சரியாக நடக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்து வருகிறேன்.

காலை உணவுத்திட்டம் மிகமிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதை புகழ்பெற்ற நாளிதழ்கள் உறுதி செய்திருப்பது என் உள்ளத்துக்கு மகிழ்ச்சியைத் தருகிறது!. பிஞ்சுக் குழந்தைகளின் மகிழ்ச்சி என் நெஞ்சிலும் நிறைகிறது!" இவ்வாறு முதல் அமைச்சர் தன்னுடைய டுவீட்டரில் தெரிவித்துள்ளார்.  

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்