தமிழக செய்திகள்

சென்னை போலீஸ் கமிஷனராக மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை அளித்த அரசுக்கு நன்றி - ஐபிஎஸ் சந்தீப் ராய் ரத்தோர்

சென்னை போலீஸ் கமிஷனராக மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை அளித்ததற்கு, அரசுக்கு நன்றி என ஐபிஎஸ் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை போலீஸ் கமிஷனராக பதவி வகித்த சங்கர் ஜிவால் தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். போலீஸ் பயிற்சி அகாடமி டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் சென்னையின் 109-வது போலீஸ் கமிஷனராக அறிவிக்கப்பட்டார். சந்தீப் ராய் ரத்தோர் முறைப்படி சென்னை போலீஸ் கமிஷனராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனராக மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை அளித்ததற்கு, அரசுக்கு நன்றி என ஐபிஎஸ் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

போலீஸ் கமிஷனராக சென்னை மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்ததற்காக அரசுக்கும் , முதல் அமைச்சருக்கும் நன்றி. மக்களுக்கு சேவை செய்வதே எங்கள் முதல் முன்னுரிமையாக இருக்கும். என தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்