தமிழக செய்திகள்

தமிழகம் முழுவதும் 34-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

தமிழகம் முழுவதும் 34-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா நோயை கட்டுப்படுத்தும் பொருட்டு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்கள் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் பிற இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இதுவரை 33 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் 1,00,000 இடங்களில் 34-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரேனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசியும், 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை செலுத்தி 6 மாதம் கடந்தவர்கள் அனைவருக்கும் முன் எச்சரிக்கை தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியும் இலவசமாக செலுத்தப்பட உள்ளது.

எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ -மாணவிகள் எந்தவித அச்சமும் இன்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனாவின் 4-ம் அலையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்