தமிழக செய்திகள்

பெரும்பான்மை இல்லாத அரசை கவர்னர் ஆதரித்து பேசியது தவறு- டிடிவி தினகரன்

அரசாங்கத்தை ஆதரிக்குமாறு கவர்னர் பேசினதே தவறு எனவும் அவர்களுக்கு பெரும்பான்மை இருக்கிறதா? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார். #TTVDhinakaran | #TNAssembly

சென்னை

சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரன், முதன்முறையாக சட்டசபைக்குள் செல்கிறார். அதேநேரத்தில் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. சட்டப்பேரவை இருக்கை எண் 148 தினகரனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

சட்டசபை கூட்டம் முடிந்ததும் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது சட்டப்பேரவையில் நான் எதிர்க்கட்சி உறுப்பினராக உள்ளேன். எதிர்க்கட்சி என்பதால் திமுக வெளிநடப்பு செய்யும்போது நானும் வெளிநடப்பு செய்ய வேண்டிய அவசியமில்லை. திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்பேன்.

தமிழக அரசு முடக்கியுள்ள நிலையில் 2030க்குள் நிலைக்கத்தக்க வளர்ச்சி எப்படி சாத்தியம்?; ஆளுநர் உரையில் முக்கிய பிரச்சினைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இரு சக்கரவாகன மானிய திட்டத்தையே அமலாக்காமல் உதவித்தொகை உயர்த்தப்பட்டு உள்ளது.ஒக்கி புயலில் காணாமல்போன 22 மீனவர்களை பற்றி எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

அரசாங்கத்தை ஆதரிக்குமாறு கவர்னர் பேசினதே தவறு எனவும் அவர்களுக்கு பெரும்பான்மை இருக்கிறதா? என்பதைதான் முதலில் கேட்டிருக்க வேண்டும் .

111 சட்டமன்ற உறுப்பினர்கள்தான் உள்ளனர் என்றும் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடாமல் அரசு எழுதி கொடுத்ததை ஆளுநர் படிக்கிறார் என்று கூறினார். முதல் கூட்டம் என்பதால், முழுமையாக கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் தான் கலந்து கொண்டேன்.

இந்த அரசே செயல்படவில்லை என்றும், அவர்களுக்குள்ளே பயம் உள்ளது. அதற்காகத்தான் மேஜையைத் தட்டி தங்களின் பயத்தை போக்கிக் கொளகின்றனர்.நித்திய கண்டம் பூரண ஆயுசாக உள்ளது என்றும் விரைவில் இந்த ஆட்சி கவிழும் என்றும் சில அமைச்சர்கள் என்னைப் பார்த்தும், பார்க்காததுபோல குனிந்து கொள்கின்றனர்.

தமிழ்நாட்டில் நடப்பது கோமாளிகளின் ஆட்சி என்பது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தெரியும். இவர்களை நம்பி, அவர்கள் எப்படி தமிழ்நாட்டில் முதலீடு செய்வார்கள். மத்திய அரசின் கைப்பாவையாக இருப்பவர்கள் ஆட்சி செய்யும் தமிழகத்தை விடுத்து மற்ற மாநிலத்திற்கு சென்றுவிடுவார்கள் என கூறினார்.

#TTVDhinakaran | #TNAssembly| #RKNagarMLA

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது