தமிழக செய்திகள்

சேவல் சண்டையில் ஈடுபட்ட ஆசாமிகள் தப்பி ஓட்டம்

கிருஷ்ணராயபுரத்தில் சேவல் சண்டையில் ஈடுபட்ட ஆசாமிகள் தப்பி ஓடினர். இவர்களிடம் இருந்து 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினத்தந்தி

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் வீரியப்பட்டி முருகன் கோவில் அருகே மற்றும் பிச்சம்பட்டி மாரியம்மன் கோவில் அருகே பணம் வைத்து சிலர் சேவல் சண்டையில் ஈடுபடுவதாக மாயனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றனர். அப்போது சேவல் சண்டையில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டதும் நாலாபுறமும் சிதறி ஓடினர். போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் வயல்வெளி வழியாக தப்பி சென்றனர். இதையடுத்து, அவர்கள் விட்டு சென்ற 8 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து