தமிழக செய்திகள்

திருவொற்றியூரில் மழைநீர் தேங்கி இருக்கும் இடங்களில் தலைமை செயலர் இறையன்பு ஆய்வு

திருவொற்றியூரில் மழைநீர் தேங்கி இருக்கும் இடங்களில் தலைமை செயலர் இறையன்பு ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

திருவொற்றியூர்,

தமிழக அரசின் தலைமை செயலர் இறையன்பு சென்னையின் பல்வேறு இடங்களுக்கு திடீர் ஆய்வு மேற்கெண்டு, மழைநீர் தேக்கம், அகற்றும் முறை குறித்து, அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை திருவெற்றியூர் கார்கில் நகர் மின்மேட்டர் அறையினை பார்வையிட்டு மழைநீர் வெளியேற்றும் முறை குறித்து கேட்ட றிந்தார்.

பின்னர் கார்கில் நகர் உள்ளிட்ட திருவெற்றியூரின் மேற்கு பகுதியில் மழைநீர் தேங்காதபடி இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கெள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் பேது திருவெற்றியூர் எம்.எல்.ஏ.கே. பி. சங்கர், மண்டல மழை கண்காணிப்பு சிறப்பு அதிகாரி ஸ்ரீதர், உதவி கமிஷனர் சங்கரன், மண்டல குழு தலைவர் தனியரசு உள்ளிட்டேர் பங்கேற்றனர்.   

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு