தமிழக செய்திகள்

கோவில்பட்டிஉதவி கலெக்டர் அலுவலகத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

கோவில்பட்டிஉதவி கலெக்டர் அலுவலகத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே. சீனிவாசன் தலைமையில் கட்சியினர் நேற்று காலையில் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்திலிருந்து இரவு நேரங்களில் பழைய பஸ் நிலையம் செல்வதற்கு இயக்கப்பட்டு வந்த சர்க்குலர் பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. அந்த சர்குலர் பஸ்களை மீண்டும் 24 மணி நேரமும் இயக்க வேண்டும் என்ற கேரிக்கையை வலியுறுத்தி இந்த பேராட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் (பொறுப்பு )செல்வகுமார் மற்றும் அரசு போக்குவரத்து கழகபணிமனை கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் இதே கேரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு