தமிழக செய்திகள்

டிரைவர் தீக்குளித்து தற்கொலை

பட்டுக்கோட்டை அருகே குடும்ப தகராறில் டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையை அடுத்த கொண்டிகுளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி (வயது52). லாரி டிரைவரான இவர், குடும்பத்தகராறு காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து வீரமணி தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவியதால் அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரமணி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.இதுகுறித்து புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்