தமிழக செய்திகள்

தங்கையின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற அண்ணன்

அண்ணன், தங்கை இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறப்படுகிறது.

தினத்தந்தி

வாணாபுரம்,

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள தொண்டமானூர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 55). இவருக்கு துக்கச்சி (25), தமிழ்செல்வி (19) என 2 மகள்களும், துக்கையன் (22) என்ற மகனும் உண்டு. துக்கச்சி திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். துக்கையனும், தமிழ்ச்செல்வியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்.

இந்த நிலையில் நேற்று துக்கையன் திடீரென தமிழ்செல்வியின் தலை மீது அம்மிக்கல்லை போட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து துக்கையனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கையை அண்ணனே அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து