மேலூர்
மேலூர் அருகிலுள்ள கொட்டகுடியை சேர்ந்தவர் அம்மாசி. இவருடைய மகன் பாலாஜி (வயது 28).என்ஜினீயர். இவர். உடல் நோயினால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணம் ஆகாததால் விரக்தி அடைந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது பாலாஜி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.