தமிழக செய்திகள்

மீன் பிடித்து கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

மீன் பிடித்து கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மீனவர் பலியானார்.

தினத்தந்தி

சென்னை திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தேசிங்கு (வயது 59). மீனவரான இவர், திருவொற்றியூர் குப்பம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கட்டுமரத்தில் தனியாக கடலுக்கு சென்றார். இந்த நிலையில், கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது தவறி விழுந்ததில் வலையில் கால் சிக்கியதில் கடலில் மூழ்கி தடுமாறினார். இதையடுத்து அப்பகுதியில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய மீனவர்கள், கடலில் மூழ்கி மயங்கி கிடந்த தேசிங்கை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்