தமிழக செய்திகள்

சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

தினத்தந்தி

திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஊராட்சி மன்ற துணை தலைவர் ஒருவருக்கும், 17 வயதுடைய சிறுமிக்கும் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தனர். இந்த நிலையில் இது குறித்த தகவல் சைல்டு லைனுக்கு கிடைத்தது. இதையடுத்து சமூக நலபாதுகாப்பு அதிகாரிகள், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அந்த சிறுமிக்கு திருமணவயதான 18 வயது எட்டவில்லை என்பது தெரிந்தது. அதனை தொடர்ந்து சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு