தமிழக செய்திகள்

தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்த தமிழக அரசு ஒத்துழைக்கவேண்டும்

தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்த தமிழக அரசு ஒத்துழைக்கவேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் சாலைகள் அமைப்பதற்கான மண் பற்றாக்குறையால் 1,572 கி.மீ. நீளத்துக்கான 45 தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் முடங்கி கிடப்பதாகவும், அவற்றை விரைவுபடுத்த ஒத்துழைக்கும்படியும் தலைமைச்செயலாளருக்கு, மத்திய நெடுஞ்சாலைத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். நெடுஞ்சாலை பணிகள் முடங்குவது வளர்ச்சிக்கு நல்லதல்ல. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு 8.70 கோடி கன அடி மண் தேவைப்படும் நிலையில், இப்போது வழங்கப்படும் வேகத்தில் மண் வெட்ட அனுமதி வழங்கப்பட்டால் இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் கூட இந்த பணிகள் முடியாது என்பதால் அனுமதி வழங்குவதை அரசு விரைவுபடுத்தவேண்டும்.

நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தி தருவதில் நிலைமை மேம்பட்டுள்ள நிலையில் மண் அள்ளுவதற்கான அனுமதியையும் தமிழக அரசு விரைந்து வழங்கவேண்டும். தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்துவதில் மத்திய அரசுக்கு ஒத்துழைத்து, அதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்