தமிழக செய்திகள்

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இவருடைய வீட்டில் இன்று காலை வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக மின்சார வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி பின்னர் ஓய்வு பெற்றவர். அவர் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இதற்கு முன்பு உதவியாளராக பணியாற்றி உள்ளார்.

சென்னையின் துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், ஓ.எம்.ஆர்., எண்ணூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளரான காசி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது