தமிழக செய்திகள்

காயத்துடன் கிடந்த மயிலுக்கு வனத்துறையினர் சிகிச்சை

திண்டிவனத்தில் காயத்துடன் கிடந்த மயிலுக்கு வனத்துறையினர் சிகிச்சை

தினத்தந்தி

திண்டிவனம்

திண்டிவனம் புதிய பஸ் நிலையத்தின் பின்பகுதியில் மயில் ஒன்று காயத்துடன் பறக்க முடியாமல் கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வெகுநேரமாகியும் வனத்துறையினர் யாரும் வராததால் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் காயத்துடன் கிடந்த மயிலை புதுச்சேரி சாலையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் கொண்டு சென்று அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர் அந்த மயிலுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். அந்த மயில் எவ்வாறு காயம் அடைந்தது என்று தெரியவில்லை? யாராவது வேட்டையாடியபோது காயம் அடைந்ததா? அல்லது ஏதேனும் வாகனங்களில் அடிப்பட்டு காயம் அடைந்ததா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து