தமிழக செய்திகள்

விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி சாவு

விக்கிரமசிங்கபுரம் அருகே விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள ஆறுமுகம்பட்டி கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராமன் (வயது 70). சலவை தொழிலாளியான இவர் கடந்த 22-ந் தேதி வீட்டில் இருந்து சிவந்திபுரம் மெயின் ரோட்டில் உள்ள டீக்கடைக்கு வந்தார். பின்னர் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் ராமன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராமன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து