தமிழக செய்திகள்

தூக்கில் பிணமாக கிடந்த ஆண்

தூக்கில் பிணமாக கிடந்த ஆண் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

க.பரமத்தி,

தென்னிலை அருகே உள்ள மொஞ்சனூர் எல்லக்காட்டுவலசை சேர்ந்தவர் தண்டபாணி. இவருக்கு சொந்தமான காட்டில் உள்ள வேப்பமரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த தண்டபாணி தென்னிலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தில்லைக்கரசி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?, தானாகவே தற்கொலை செய்து கொண்டாரா? என்பன உள்பட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்