தமிழக செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது

தினத்தந்தி

மதுரை மதிச்சியம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 55). கடந்த 2019-ம் ஆண்டில் இவர் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது சம்பந்தமாக மதுரை தல்லாகுளம் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்மோகனை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் ஜான்சி ஆஜரானார். முடிவில் ராஜ்மோகன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முத்துக்குமரவேல் நேற்று தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்