தமிழக செய்திகள்

வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் சாவு

நெல்லை தாழையூத்தில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் இறந்தார்.

தினத்தந்தி

தாழையூத்து வண்ணாம்பச்சேரி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் மகன் ஆறுமுகம் (வயது 49). கொத்தனார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, மகன் உள்ளனர். ஆறுமுகம் வழக்கமாக தனது வீட்டின் மொட்டை மாடியில் தூக்குவா. அதேபோல் கடந்த 21-ந் தேதி வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீட்டு மாடியில் தூங்க சென்றார். மறுநாள் காலையில் பார்த்த போது ஆறுமுகம் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உயிர் இழந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த தாழையூத்து போலீசார், ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்