தமிழக செய்திகள்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாளிகள் பிரிவு 26-ந்தேதி இயங்காது

அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

மிலாடி நபியை முன்னிட்டு, வரும் 26-ந்தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“அரசு விடுமுறை தினமான 26.08.2026 (புதன்கிழமை) அன்று மிலாடி நபியை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.