தமிழக செய்திகள்

விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர் இடைநீக்கம்

கிராமசபைக் கூட்டத்தில் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

ஸ்ரீவில்லிபுத்தூர்,

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் கங்காகுளம் அருகே உள்ள பிள்ளையார்குளம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் எட்டி உதைத்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வன்னியம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். அதனை தொடர்ந்து ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியனை இடைநீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி உத்தரவிட்டுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து