தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

சிகர நிகழ்ச்சியாக 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

மதுரை,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக் களில் பங்குனி பெருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த திருவிழா ஆண் டுதோறும் 15 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு விழா நாளை(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 6-ந் தேதி வரை 15 நாட்கள் விழா கோலாகலமாக நடக்கிறது.

திருவிழாவை முன்னிட்டு தினமும் காலையிலும், இரவிலுமாக பல்வேறு வாகனங்களில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வருகிற 28-ந் தேதி கைப்பாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கோவிலில் உள்ள வாகனங்களிலேயே அதிக எடை கொண்ட வெள்ளியிலான யானை வாகனத்தில் எழுந்தருளும் முருகப்பெருமான், தெய்வானையை பக்தர்களும், கோவில் சீர் பாதங்களும் கைப்பாரமாக சுமந்து செல்வது தனிச்சிறப்பாகும். இதையொட்டி பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம் வழங்கப்படும்.

1-ந்தேதி பங்குனி உத்திரம் அன்று ஏராளமான பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். 2-ந்தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. சிறப்பு நிகழ்ச்சியாக 3-ந்தேதி முருகப்பெருமானுக்கு தங்க கீரிடம் சூட்டி நவரத்தினங்களாலான செங்கோல் வழங்கி பட்டாபி ஷேகம் நடக்கிறது.

திருவிழாவின் முத்தாய்ப்பாக 4-ந்தேதி முருகப்பெருமான்-தெய்வானை யின் திருக்கல்யாணம் நடக்கிறது. அப்போது மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். சிகர நிகழ்ச்சியாக 5-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 6-ந் தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது.