தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி மயில் செத்தது

பெண்ணாடம் அருகே மின்சாரம் தாக்கி மயில் செத்தது தேசியக்கொடி போர்த்தி போலீசார் மரியாதை

பெண்ணாடம்

பெண்ணாடம் செம்பேரி, சவுந்தர சோழபுரம், பொன்னேரி, சிலிப்பனூர் ஆகிய கிராமங்களின் அருகாமையில் உள்ள வெள்ளாற்றின் கரையோரம் ஆயிரக்கணக்கான மயில்கள் உள்ளன. இந்தநிலையில் நேற்று காலை பெண்ணாடத்தில் இருந்து செம்பேரி செல்லும் சாலையில் மின்மாற்றியில் சிக்கிய மயில் ஒன்று மின்சாரம் தாக்கி செத்து கிடந்தது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் செத்து கிடந்த மயிலை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தார். தொடர்ந்து விருத்தாசலம் கோட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனக்காப்பாளர் செல்வபாண்டியன் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் வனக்காப்பாளர் செல்வபாண்டியன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் மின்சாரம் சிக்கி உயிரிழந்த மயிலின் மீது தேசியக்கொடியை போர்த்தி மரியாதை செலுத்தினர். பின்னர் இந்த மயிலை வனத்துறையினர் எடுத்து சென்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு