தமிழக செய்திகள்

கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவர் கைது

கல்லிடைக்குறிச்சி பகுதியில் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

அம்பை:

கல்லிடைக்குறிச்சி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு தொடர்பாக, வீரவநல்லூர் கோட்டைவாசல் தெருவை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 36) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.

இதையடுத்து ஸ்ரீகாந்தை கைது செய்ய நெல்லை மகிளா கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது. அதன்படி கல்லிடைக்குறிச்சி போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து