தமிழக செய்திகள்

மது பாட்டில்கள் வைத்திருந்தவர் கைது

உடன்குடி பகுதியில் மது பாட்டில்கள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் மற்றும் போலீசார் உடன்குடி பஜார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு வங்கியின் அருகே வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்த செல்லையா மகன் குமார் (வயது 45) என்பவர் மதுபாட்டில்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT