தமிழக செய்திகள்

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

களக்காடு அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

களக்காடு அருகே உள்ள நாகன்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் மதன் (24). இவர் சம்பவத்தன்று களக்காட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மேலப்பாளையம் அருகே உள்ள வீரமாணிக்கபுரத்தை சேர்ந்த முருகேஷ் (36) என்பவர் பொதுஇடத்தில் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டு இருந்தார். இதைப்பார்த்த மதன் தட்டிக் கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த முருகேஷ், மதனை கல்லை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதன் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முருகேசை கைது செய்தனர். இவா நெல்லையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து