தமிழக செய்திகள்

புதன் சந்தையில் மாடுகள் விலை குறைந்தது

புதன் சந்தையில் மாடுகள் விலை குறைந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் அருகே உள்ள புதன் சந்தை நேற்று காலை வழக்கமாக கூடியது. அப்போது ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் மாடுகளை வாங்க குவிந்தனர். அதைத்தொடர்ந்து கடந்த வாரம் ரூ.18 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட பசுமாடு இந்த வாரம் ரூ.17 ஆயிரத்திற்கும், ரூ.27 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட எருமை மாடு ரூ.26 ஆயிரத்திற்கும் விற்பனை நடைபெற்றது. கன்றுக்குட்டி ரூ.500 குறைக்கப்பட்டு ரூ.9 ஆயிரத்து 500-க்கும் விற்பனையானது. மேலும் கேரள மாநிலத்தில் தற்போது மீன்பிடிகாலம் தொடர்வதாலும் அங்கு 2 கிலோ மீன் ரூ.100-க்கு விற்கப்படுவதால் அந்த மாநிலத்தில் மாட்டு இறைச்சி நுகர்வோரின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் இங்குள்ள புதன் சந்தையில் மாடுகள் விலை குறைந்தது என்று வியாபாரிகள் கவலையுடன் கூறினர். நேற்று ரூ.2 கோடிக்கு வியாபாரம் நடைபெற்றதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்