தமிழக செய்திகள்

தக்கலை அருகே காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தக்கலை அருகே காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தக்கலை, 

தக்கலை அருகே காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது60). இவருக்கு ஷீனா (50) என்ற மனைவியும், அஜூ ( 26) என்ற மகனும் உள்ளனர். வேணுகோபால் தக்கலை அருகே உள்ள ஒரு கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று காலையில் மனைவியும், மகனும் வெளியே சென்றனர்.

பின்னர் வீட்டில் தனியாக இருந்த வேணுகோபால் மாடியில் தூக்கில் தொங்கினார். அப்போது வீட்டுக்கு வந்த மகன் அஜூ இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனே வேணுகோபாலை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் கொற்றிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு