தமிழக செய்திகள்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 16% அதிகம் பெய்துள்ளது

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 16% அதிகம் பெய்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை ஒட்டியே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

தினத்தந்தி

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் நகர்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்குப் பருவமழை பரவலாக பெய்துள்ளது. அக்டோபர் 3-ஆம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை ஒட்டியே இருக்கும்.

கடந்த ஜூன் 1 முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு 38 சென்டிமீட்டர். இந்த காலகட்டத்தின் இயல்பு அளவு 33 சென்டிமீட்டர். இது இயல்பைவிட 16 சதவிகிதம் அதிகம்.

சென்னையில் ஜூன் 1 முதல் இன்று வரை பெய்த மழையின் அளவு 59 சென்டிமீட்டர். இயல்பு அளவு 42 சென்டிமீட்டர் ஆகும். இது இயல்பை விட 39 சதவிகிதம் அதிகம். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இயல்பை விட அதிகமாக மழை பெய்துள்ளது.

தெற்காசிய நாடுகளுக்கான வடகிழக்கு பருவமழையின் முன்னறிவிப்பின்படி இந்த ஆண்டு தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளுக்கு வடகிழக்கு பருவமழை இயல்பு அளவை ஒட்டியே இருக்கும். தென் மேற்கு பருவமழை அக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் முடிய உள்ளதால் மூன்றாம் வாரம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை