தமிழக செய்திகள்

வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசம்

இலுப்பூர் அருகே வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசமானது.

இலுப்பூர் அருகே உள்ள ஆச்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மாமுண்டி. இவருக்கு சொந்தமான வைக்கோல்போர் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து அருகே இருந்தவர்கள் உடனடியாக இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் ஏராளமான வைக்கோல் போர் தீயில் எரிந்து நாசமானது. 

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்