சென்னை,
ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால், வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஒரு சிலிண்டர் வைத்துள்ள குடும்பங்கள், முன்பதிவு செய்வதற்கான கால இடை வெளி 21 நாட்கள் என்று சமீபத்தில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதை 25 நாட்கள் என்று மத்திய அரசு தற்போது உயர்த்தி உள்ளது.
இந்தநிலையில், தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் அச்சம் ஏற்பட்டுள்ளதாக திமுக எம்.பி.கனிமொழி எம்.பி., தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்களில் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பரவலான கவலையை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் போன்ற எரிபொருள்களின் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற அறிக்கைகள் இந்த கவலைகளை மேலும் அச்சப்படுத்தி உள்ளன.
கோவிட்-19 தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது இதேபோன்ற ஒரு போக்கு காணப்பட்டது, அப்போது மத்திய பாஜக அரசின் தாமதமான மற்றும் போதுமான நடவடிக்கை இல்லாததால் சாதாரண மக்கள் நெருக்கடியின் சுமையைத் தாங்க வேண்டியிருந்தது.
சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரைவாகச் செயல்பட வேண்டும் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பரந்த பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடிய இடையூறுகளைத் தடுக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என் அதில் பதிவிட்டுள்ளார்.