தமிழக செய்திகள்

கொரோனா பரவலின் நிலையை கண்டறிய 30 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய தமிழக அரசு திட்டம்

நோய் எதிர்ப்பு சக்தி மூலம் கொரோனா பரவலின் நிலையை கண்டறிய, 30 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறியும் வகையில் பொதுமக்களிடம் ஐ.சி.எம்.ஆர். ஆய்வு நடத்தியது. பொதுமக்களின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கொண்டு கொரோனா சமூகத்தில் எந்த நிலையில் உள்ளது என்பதை அறியும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதன்படி தமிழகத்தில் சென்னை, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த ஆய்வில் 21.5 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தேசிய அளவில் 2வது ஆய்வை ஐ.சி.எம்.ஆர். கடந்த 20ம் தேதி நடத்தி முடித்தது. இந்நிலையில் தமிழக அரசு இதுபோன்ற ஆய்வை ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளது.

இதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 30 ஆயிரம் மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இந்த சோதனையின் முடிவில் ஒருவரின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அளவு கண்டறியப்பட்டு அதன் மூலம் கொரேனா பாதிப்பின் நிலைமை கண்டறியப்படும் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் ஆய்வு தொடங்கப்பட்டு, அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு