தமிழக செய்திகள்

வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

திண்டுக்கல் அருகே சிறுமி கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தினத்தந்தி

திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தராயன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சகாயபெஞ்சமின் (வயது 30). இவர், கடந்த 2019-ம் ஆண்டு 17 வயது சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தில் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாய பெஞ்சமினை கைது செய்தனர். இந்த வழக்கு, திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி சரண் நேற்று தீர்ப்பளித்தார். இதில் குற்றம்சாட்டப்பட்ட சகாயபெஞ்சமினுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும், 363 பிரிவின் (சிறுமியை கடத்துதல்) கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்