தமிழக செய்திகள்

அம்மன் கழுத்தில் கிடந்த தாலி திருட்டு

உளுந்தூர்பேட்டை அருகே அம்மன் கழுத்தில் கிடந்த தாலியை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினத்தந்தி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாடு கிராமத்தில் பூரணி, பொற்கலை சமேத அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பூரணி மற்றும் பொற்கலை அம்மன் கழுத்தில் கிடந்த 2 பவுன் தாலியை திருடி சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.90 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. பின்னர் இதுபற்றி கிராமமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருட்டு நடந்த கோவிலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்