தமிழக செய்திகள்

திருடியவர் கைது

சிவகிரியில் வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் திருடியவர் கைது

தினத்தந்தி

சிவகிரி:

சிவகிரி அண்ணா வாழையடி தெருவைச் சேர்ந்தவர் காளிதாஸ் என்பவருடைய மகன் பரமசிவன் (வயது 37). இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 கிராம் தங்க நகை மற்றும் ரூ.9 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிவகிரி போலீசில் பரமசிவன் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மாரியப்பன் மகன் இளவரசன் (19) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், பரமசிவன் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை இளவரசன் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை பேலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நகை, பணத்தையும் மீட்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை